எனக்கு வந்த ஒரு மெயில், உங்களின் பார்வைக்காக...
சும்மா இருங்க, இலவசம் தான் மக்களை வாழ வைக்குது.
2. அய்யா ஊரெல்லாம் ஒரே சாராயம். சாராயத்தை குறைங்க
மூடிகிட்டு இருங்க, சாராயம் வித்தாதான் இலவசம் கொடுக்க முடியும்.
3. அய்யா, முல்லை பெரியார்ல தண்ணி விட மாட்டேங்குறாங்க அய்யா
இப்போதான் கேசு போட்டு இருக்கோம். ஓணத்துக்கு லீவு வுட்டாச்சு. இது முடிஞ்சு போச்சு.
4. அயயையோ, அய்யா காவிரில தண்ணி வரல
அங்க தேர்தல் வருது. குடைச்சல் கொடுக்க கூடாது. சர்வக்னர் சிலை திருவள்ளுவர் சிலை தொறந்து விட்டுட்டோம். பிரச்சினை முடிஞ்சு போச்சு.
5. அய்யா, அப்போ பாலாறு
அது யாருக்கு வேணும், வேணா ஒரு கிரிக்கெட் பால் வாங்கி தரேன், விளையாடுங்க.
6. சரி, அய்யா ஊருக்குள்ள பூராவும் கரண்ட்டு இல்ல. தொழில் பண்ண முடில, படிக்க முடில
கரண்ட் இல்லேனா, கற்காலம் மாறி இயற்கையோட ஒன்றி வாழ பழகுங்க.
7. அய்யா எங்களை அடமானம் வெச்சு தமிழ்நாட்டுக்கு கடனை ஏத்தி விட்டுட்டீங்களே, இப்போ யாரு கட்டுவா?
கடன் வாங்குறவன் தான் மனுஷன். கடன் வாங்குனாதான் இலவசம் கொடுக்க முடியும்.
8. அய்யா விலைவாசி எல்லாம் ஏறி போச்சு
ம்ம்ம் சம்பளம் ஏறி போச்சு, வாங்கும் திறன் ஏறிடிச்சு. மூடிகிட்டு போயி வாங்கி தின்னு.
9. அய்யா ஊரெல்லாம் ஒரே ரவுடிங்க தொல்லை, புள்ளை குட்டிங்க ஸ்கூல் க்கு கூட போக முடியல, ஒரே கொலை கொள்ளை கற்பழிப்பு
ஆங்... ஆங்...அதெல்லாம் எனக்கு தெரியும். பக்கத்து மாநிலத்தை விட இங்க கம்மியாதான் கற்பழிக்கிறாங்க. அத லூஸ்ல விடு.
10. அய்யா ஒரு பொங்கல் கூட கொண்டாட முடில
பாண்டி பஜார்ல போயி பாரு தெரியும்.
11. அய்யா மீனவர்கள பூரா கொன்னு கொன்னு போடுறாங்க அய்யா
ம்ம் நீ எதுக்கு பேராசை புடிச்சு அங்கேயெல்லாம் போற மீன் புடிக்க?
12. அய்யா பெட்ரோல் விலை வாங்க முடில
உன்னையெல்லாம் யாரு வண்டி வாங்க சொன்னா?
13. அய்யா அப்புறம் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்லு
அதெல்லாம் ஒண்ணுமே நடக்கல. யாராச்சும் எதாச்சும் சொன்னா பாத்துக்கலாம்.
14. அய்யா அப்போனா அந்த போன் ல பேசி இருக்காங்களே அது
அது ரெண்டு பொம்பளைங்க பேசிக்கிறாங்க. பொம்பளைங்க பேசுறத ஒட்டு
கேக்குறியே வெக்கமா இல்ல.
15. அய்யா மணலு, கம்பி விலை எல்லாம் ஏறி போச்சு. குருவி மாறி சேத்து வெச்சு ஒரு வீடு கட்டலாம்ன்னு நெனச்சுதுல மண்ணு விழுந்துடிச்சு
அதுக்குதான இலவசமா வீடு கொடுக்கிறேன். போய் என்னோட ஆளை பாத்து கவனி, வீடு கிடைச்சிடும்.
16. அய்யா பொது மருத்துவமனைக்கு போக கூட முடில. வசதியே இல்ல
அப்படியா, சரி இந்தா காப்பீட்டு திட்டம், அதுக்கு ஒரு அட்டை.
17. அய்யா வீடு ஒதுக்கீடு திட்டத்துல ஒரே ஊழல்
அவங்க எல்லாம் சமூக சேவகர்கள் அப்படித்தான் கொடுப்போம்.
18. அய்யா அப்போ இந்த கூத்தாடி சினிமா காரனுக ரெம்ப கஷ்டபடுராணுக
இந்தா அவனுகளுக்கு இலவசமா நிலம். என்ஜாய்.
என்றும் அன்புடன்,
பாசகாரபயபுள்ள
3 comments:
//கரண்ட் இல்லேனா, கற்காலம் மாறி இயற்கையோட ஒன்றி வாழ பழகுங்க. //
அதானே அ(கொ)ய்யா கரைட்டாதான சொல்றாரு... ச்ச்ச.. இப்டில்லாம் கேள்விகேட்டா மனுஷன் என்னதான் பண்ணுவாரு...
//அது ரெண்டு பொம்பளைங்க பேசிக்கிறாங்க. பொம்பளைங்க பேசுறத ஒட்டு கேக்குறியே வெக்கமா இல்ல. //
ஹி..ஹி...இது அக்மார்க்...
நிஜங்களின் சுவடுகளை பொய்யெனும்
புயல் பொறுமையாக அளித்துச் செல்வதை மிக அழகாக சித்தரித்துள்ளீர்கள்.அருமையான
பகிர்வு நன்றி வாழ்த்துக்கள்.
Post a Comment